உத்தரப் பிரதேசத்தில் கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் மின்னல் பாய்ந்து 89 பேர் பலியானதற்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த புதன்கிழமை (மே 13) மாலை பெய்த கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் மின்னல் பாய்ந்த சம்பவங்களால் 89 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 53 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அதிகப்படியாக பிரக்யாராஜ் மாவட்டத்தில் 21 பேரும், பதோஹியில் 14 பேரும், ஃபடேஹ்பூரில் 11 பேரும் பலியாகியுள்ளனர். மேலும், மழை தொடர்பான பாதிப்புகளால் சம்பால், ஹர்டோய், கான்பூர் டெஹாட், உன்னாவ் உள்ளிட்ட மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச கனமழையால் பலியானவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இன்று (மே 14) இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பெரும் பேரழிவு மற்றும் உயிரிழப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பேரிடரில் 87-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்ததுடன் 114 கால்நடைகளும் பலியானது தெரியவந்துள்ளது.
Summary
Russian President Vladimir Putin has expressed his condolences over the deaths of 89 people in Uttar Pradesh caused by heavy rains, hailstorms, and lightning strikes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷியாவில் வெற்றி தினக் கொண்டாட்டம்: எளிமையாக நடந்த ராணுவ அணிவகுப்பு; புதின் பங்கேற்று எழுச்சியுரை!

உ.பி.யில் 36 மணிநேரத்தில் 8 என்கவுன்டர்கள் செய்த போலீஸ்! 10 பேர் படுகாயம்!

ரஷிய அதிபர் புதினுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி: ஈரான்

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
விடியோக்கள்

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை


