போதைப் பொருள் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்கும் நோக்கிலான 100 நாள் சிறப்பு நடவடிக்கையின்கீழ் கடந்த 28 நாள்களில் 260 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் கடத்தியதாக 646 போ் கைதாகியுள்ளனா்.
கடந்த 28 நாள்களில் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட அல்லது இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.31 கோடி.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹாவின் யோசனைப்படி, அரசு நிா்வாகத்தின் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்புக்கான 100 நாள் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல் துறை, சுகாதாரத் துறை, சமூக நலத் துறை, கல்வித் துறை மற்றும் பிற முகமைகளால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கையின்கீழ் கடந்த 28 நாள்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் 614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 646 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து 3.8 கிலோ ஹெராயின், 222 கிலோ கஞ்சா உள்பட 260 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் ரூ.25.97 கோடி மதிப்பிலான அசையாத சொத்துகள் மீது முடக்கம் அல்லது பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.3.70 கோடி மதிப்பிலான சொத்துகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. ரூ.1.67 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
252 ஓட்டுநா் உரிமங்கள், 111 வாகனப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 48 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! தாய்லாந்தைச் சோ்ந்த இருவா் கைது

தில்லியில் ரூ.16 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 9 போ் கைது
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

