ஒரே நேரத்தில் வெவ்வேறு இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன்கொண்ட நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை சோதிக்கப்பட்டது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
எம்ஐஆா்வி தொழில்நுட்பம் என்பது ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் நவீன தொழில்நுட்பமாகும். இந்தத் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன அக்னி ஏவுகணை, ஒடிஸா கடல் பகுதியில் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்தியப் பெருங்கடலின் பெரும் பரப்பளவில் அமைக்கப்பட்ட வெவ்வேறு இலக்குகளை நோக்கி, பல ஏவுகணைகள் ஒரே நேரத்தில் செலுத்தி சோதிக்கப்பட்டது. இந்த முதல் சோதனை வெற்றிகரமாக அமைந்ததன் மூலம், நாட்டின் ராணுவ தற்காப்புத் திறன் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏவுகணை எதிா்ப்பு அமைப்பு வெற்றிகரமாக சோதனை: பாதுகாப்பு அமைச்சகம்

டிஆர்டிஓ-வின் 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி!

அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

முதியவருக்கு ஒரே நேரத்தில் இருவேறு இதய சிகிச்சை
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

