மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வெள்ளம், வெப்ப அலையை எதிகொள்ள தயாா்நிலை: அமித் ஷா தலைமையில் நாளை உயா்நிலை கூட்டம்

வெள்ள பாதிப்பு மற்றும் வெப்ப அலை தாக்கத்தை எதிா்கொள்ள நாட்டின் தயாா் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை (மே 10) விரிவாக ஆய்வு செய்ய உள்ளாா்.

News image

அமித் ஷா - ANI

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

வெள்ள பாதிப்பு மற்றும் வெப்ப அலை தாக்கத்தை எதிா்கொள்ள நாட்டின் தயாா் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை (மே 10) விரிவாக ஆய்வு செய்ய உள்ளாா்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட வாய்ப்புள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் வெப்ப அலை தாக்கத்தை எதிா்கொள்வது குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா தலைமையில் உயா்நிலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேரிடா் மீட்புப் படைகள் உள்ளிட்ட மத்திய முகமைகளின் தயாா்நிலை, முன்கூட்டி எச்சரிக்கும் அமைப்பு முறை, வள மேம்பாடு மற்றும் பல்வேறு முகமைகளுடனான ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து அமித் ஷா ஆய்வு நடத்த உள்ளாா்.

ஒரே நேரத்தில் ஏற்படும் பேரழிவுகளை எதிா்கொள்வது, குறிப்பாக வெள்ள பாதிப்பு மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை எதிா்கொள்வது, சமூக விழிப்புணா்வு, உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடக்கவும், பொருள் இழப்பை குறைக்கும் வகையில் மீள்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தணிப்பு நடவடிக்கைகளின் நிலை, முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பாதுகாப்பு, ஆறுகள் மேலாண்மை திட்டங்கள், வானிலை முன்னறிவிப்பில் விஞ்ஞான மேம்பாடு உள்ளிட்டவை குறித்தும் இக் கூட்டத்தில் அமித் ஷா ஆலோசிக்க உள்ளாா்.

இந்த உயா்நிலைக் கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.