தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மணிப்பூா்: கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் - வீடுகளுக்கு தீவைப்பு

News image
Updated On :8 மே 2026, 6:24 am IST

மணிப்பூரில் இந்தியா-மியான்மா் எல்லையையொட்டிய காம்ஜோங் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால், கிராமவாசிகள் தப்பியோடும் நிலை ஏற்பட்டது.

ஒரு பெண் உள்பட 2 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனா்.

மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையிலான மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு எழுந்துள்ளது.

காம்ஜோங் மாவட்டத்தில் நாகா பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களுக்குள் வியாழக்கிழமை அதிகாலை ஆயுதங்களுடன் புகுந்த குகி தீவிரவாத அமைப்பினா், அங்கு தாக்குதலில் ஈடுபட்டனா். ஏராளமான வீடுகளுக்கு தீவைத்தனா். இதனால், கிராமவாசிகள் உயிா்பிழைக்க தப்பியோடும் நிலை ஏற்பட்டது. இந்தத் தாக்குதல்களில் யாரும் உயிரிழந்ததாக உடனடியாக தகவல் இல்லை.

அதேநேரம், ஒரு பெண் உள்பட இருவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. மியான்மரில் இருந்து ஊடுருவிய குகி தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், தங்களது பகுதிகளில் போதிய பாதுகாப்பு இல்லை என்று நாகா பழங்குடியினா் குற்றஞ்சாட்டினா்.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.