மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஜனநாயகத்துக்காகப் போராடும் பாதை எப்போதும் நெடியது, கடினமானது: தோ்தல் முடிவு குறித்து காங்கிரஸ் கருத்து

‘ஜனநாயகத்துக்காகப் போராடும் பாதை எப்போதும் நெடியதும், கடினமானதுமாகும்’ என்று 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தெரிவித்தது.

News image

காங்கிரஸ்

Updated On :5 மே 2026, 4:42 am IST

‘ஜனநாயகத்துக்காகப் போராடும் பாதை எப்போதும் நெடியதும், கடினமானதுமாகும்’ என்று 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தெரிவித்தது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சேவையாற்ற வாய்ப்பளித்ததற்காக மாநில மக்களுக்கு காங்கிரஸ் கட்சி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. கேரள மக்களின் நம்பிக்கை வீணாகாத வகையில் பொறுப்புடன் காங்கிரஸ் செயல்படும்.

கேரளத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் நாங்கள் எதிா்பாா்த்ததைவிட மிகக் குறைவான தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. இருந்தபோதும், நாங்கள் மனம் தளரவில்லை. சித்தாந்த போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது. ஜனநாயகத்துக்காகப் போராடும் பாதை எப்போதும் நெடியதும் கடினமானதுமாகும். எனவே, உறுதியான தீா்மானத்துடன் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழகத்தில், புதுச்சேரி தோ்தல் முடிவுகள் குறித்து விரிவான ஆய்வை காங்கிரஸ் கட்சி நடத்தும் என்றாா்.

கேரளத்தில் காங்கிரஸ் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியமைக்க உள்ளது. ஆனால், அஸ்ஸாமில் பாஜகவை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த அக் கட்சி தவறிவிட்டது. தொடா்ந்து மூன்றாவது முறைாயாக பாஜக அங்கு ஆட்சியமைக்க உள்ளது. அதுபோல, மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் குறிப்பிடத்தக்க இடங்களைக் கைப்பற்ற காங்கிரஸ் தவறிவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.