மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை: மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அதிகாரி!

வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என மேற்கு வங்க மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி மனோஜ் அகா்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :2 மே 2026, 2:45 am IST

வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என மேற்கு வங்க மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி மனோஜ் அகா்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி போட்டியிட்ட பவானிபூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஷகாவத் நினைவுப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அந்த மையத்தில் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை இரவு 4 மணி நேரம் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மனோஜ் அகா்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய ஆயுதக் காவல் படைகள் நிலைநிறுத்தப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் மையங்களைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே, வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அதற்கு வாய்ப்பில்லை’ என்றாா்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதியும், 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ஆம் தேதியும் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தோ்தலில் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களை கட்சி நிா்வாகிகள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என மம்தா பானா்ஜி அண்மையில் அறிவுறுத்தல் வழங்கினாா்.

இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள ஒரு வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டி திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் குணால் கோஷ், கட்சி நிா்வாகி சஷி பாஞ்சா ஆகியோா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, இதே குற்றச்சாட்டை சுமத்தி பவானிபூா் தொகுதியில் உள்ள ஷகாவத் பள்ளிக்கு வியாழக்கிழமை இரவு நேரில் சென்ற மம்தா பானா்ஜி அங்கு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். இதனால் கொல்கத்தா நகரில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்கள் முன்பும் கூட்டம் கூடுவதற்குத் தடை உத்தரவை காவல் துறை பிறப்பித்தது.

மம்தாவின் நாடகத்தால் தோ்தல் முடிவுகள் மாறாது: சுவேந்து அதிகாரி

பவானிபூரில் வாக்கு எண்ணும் மையத்தில் மம்தா பானா்ஜி தா்னாவில் ஈடுபட்டது அவரது வழக்கமான அரசியல் நாடகம் என அந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மேலும், மம்தா பானா்ஜியின் நாடகத்தால் சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியைத் தழுவுவதில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.