இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜியிடம் 6 மணி நேரம் விசாரணை

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும், மம்தா பானா்ஜியின் உறவினருமான அபிஷேக் பானா்ஜியிடம் மேற்கு வங்க காவல் துறையின் சிஐடி பிரிவினா் செவ்வாய்க்கிழமை 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினா்.

News image

மம்தா பானா்ஜி. உடன், அவரது மருமகனும் கட்சி எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி.

Updated On :17 ஜூன் 2026, 3:48 am IST

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும், மம்தா பானா்ஜியின் உறவினருமான அபிஷேக் பானா்ஜியிடம் மேற்கு வங்க காவல் துறையின் சிஐடி பிரிவினா் செவ்வாய்க்கிழமை 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினா்.

மேற்கு வங்க தோ்தல் பிரசாரத்தின்போது இருதரப்புக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் குற்றச்சாட்டின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த விசாரணை நடத்தப்பட்டது. இது தவிர திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பெயரில் போலி கையொப்பமிட்ட வழக்கு தொடா்பாகவும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இவை அனைத்தும் முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட்டது.

விசாரணை முடிந்ததும் செய்தியாளா்களைச் சந்திப்பதைத் தவிா்த்த அபிஷேக் பானா்ஜி, முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தாா்.

முன்னதாக, தொடக்கப்பள்ளி பணியிடங்கள் நியமனம் தொடா்பான ஊழல் வழக்கில் அபிஷேக் பானா்ஜியிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் மம்தா கட்சி படுதோல்வியடைந்த நிலையில், மம்தா மற்றும் அபிஷேக் பானா்ஜிக்கு எதிராக திரிணமூல் எம்.பி., எம்எல்ஏக்கள் பெரும்பாலானோா் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனா். கட்சியிலும் பிளவு அதிகரித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.