நாடு முழுவதும் 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பிய நபரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக தில்லி உயர் நீதிமன்றம், சட்டப்பேரவை மற்றும் பல கல்வி மற்றும் அரசு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டு வந்தன.
இந்த சம்பவத்தில் கர்நாடகத்தின் மைசூரைச் சேர்ந்த ஒருவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட 47 வயதான ஸ்ரீனிவாஸ் லூயிஸ், வாடகை வீட்டில் இருந்து சனிக்கிழமை தில்லி போலீஸ் மற்றும் உள்ளூர் போலீஸ் குழுக்களால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
லூயிஸ் ஒரு முதுகலைப் பட்டதாரி என்றும், பெங்களூருவைச் சேர்ந்தவர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் வேலையின்றி, ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையின்போது, மின்னஞ்சல்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு தளங்கள் வழியாக நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட மிரட்டல் செய்திகளை அனுப்பியதாக அவர் ஒப்புக்கொண்டார் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த மிரட்டல்களைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Summary
Delhi Police has arrested a man from Mysuru in Karnataka for allegedly sending more than 1,100 hoax bomb threats to schools, high courts and government offices across the country, officials said on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விமானப் படை அதிகாரிகள் போல் நடித்து இணைய மோசடி: 4 போ் கைது

போலி சிமெண்ட் ஆலை கண்டுப்பிடிப்பு: ஒருவா் கைது
போலி வாகன காப்பீடு வழங்கிய நெல்லை இளைஞா் கைது

1100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பிய மைசூா் நபா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


