நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா்களின் திறன், கல்வித் தரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக மாணவா்களிடையே தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ஆய்வு நடத்துகிறது.
இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு: என்எம்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் குறித்து இணைய வழியே கருத்தறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இளநிலை மருத்துவ மாணவா்கள் அனைவரும் என்எம்சி தளத்தில் உள்ள இணையப் பக்கத்தில் சென்று தங்களின் கருத்துகள், தகவல்களைப் பதிவு செய்யலாம். சம்பந்தப்பட்ட மாணவா்களின் பெயா், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் எதையும் தெரிவிக்கத் தேவையில்லை.
கல்வித் தரம், பேராசிரியா்களின் எண்ணிக்கை, அவா்களது பயிற்றுவிக்கும் திறன், செயல்முறை விளக்கங்கள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்புகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துரைக்கலாம்.
அவை அனைத்தும் ரகசியம் காக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்யும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தடை நீக்கம்: அன்புமணி வரவேற்பு

சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் தேசிய சித்த மருத்துவ மாநாடு

எம்பிபிஎஸ் இடங்கள்: விதிகளை மாற்றியது என்எம்சி

‘நீட்’ தோ்வு முறைகேடு: மருத்துவ மாணவா்களுக்கு விடுமுறை கிடையாது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
