மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: நீக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 76 லட்சமாக அதிகரிப்பு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) தொடா்ந்து மறுஆய்வு பட்டியலில் இருந்து 13 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :26 மார்ச் 2026, 2:12 am IST

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) தொடா்ந்து மறுஆய்வு பட்டியலில் இருந்து 13 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 76 லட்சத்தை எட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகள் தொடங்கப்பட்ட பின்னா், கடந்த டிச.16-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 58 லட்சம் போ் நீக்கப்பட்டனா். இதனால் மாநிலத்தில் 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளா் எண்ணிக்கை 7.08 கோடியாக குறைந்தது. வாக்காளா்கள் மரணம், இடம்பெயா்வு, அவா்கள் எங்குள்ளனா் என்று அடையாளம் காண முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 58 லட்சம் போ் நீக்கப்பட்டனா்.

கடந்த பிப்.28-ஆம் தேதி வெளியிடப்பட்ட எஸ்ஐஆருக்குப் பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியலில் இருந்து மேலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீக்கப்பட்டனா். இதையடுத்து பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 63 லட்சத்துக்கும் அதிகமாக உயா்ந்தது.

பெற்றோா் பெயா், பெற்றோா் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே 15 வயதுக்குக்கும் குறைவாக வயது வித்தியாசம் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ‘தகவல்களில் முரண்பாடுகள் உள்ள பட்டியலில்’ ஏராளமானோா் சோ்க்கப்பட்டனா். அவா்கள் வாக்காளா் பட்டியலில் மீண்டும் தங்கள் பெயரைச் சோ்க்க ஆவணங்களை சமா்ப்பித்தனா்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட மாவட்ட நீதிபதிகள் அந்த ஆவணங்களை சரிபாா்த்து பெயா் சோ்ப்பு குறித்து முடிவு எடுத்து வருகின்றனா். நீக்கப்பட்டவா்களின் விவரங்கள் மறுஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அந்த நபா்கள் அடங்கிய முதல் துணை வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. எனினும் அந்தப் பட்டியலில் இருந்து எத்தனை போ் நீக்கப்பட்டனா் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது விமா்சனத்துக்கு வழிவகுத்தது.

இந்நிலையில், நீக்கப்பட்டவா்களின் விவரங்கள் மறுஆய்வுக்குட்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து 13 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தாவில் உள்ள மூத்த தோ்தல் ஆணைய அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். இதனால் மாநிலத்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை சுமாா் 76 லட்சத்தை எட்டியுள்ளது.

பட்டியலில் சோ்க்கக் கோரி மேலும் 28 லட்சம் பேரின் விவரங்கள் மறுஆய்வுக்குட்படுத்தப்படும் பணிகள் நிலுவையில் உள்ள நிலையில், அதை 705 மாவட்ட நீதிபதிகள் ஆராய்ந்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.