இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ சி. சி. முகுந்தன் கேரள பாஜகவில் இணைந்தார்
பட்யலினத்தவருக்காக (எஸ்சி) ஒதுக்கப்பட்ட நாட்டிகா தொகுதியில் தன்னை மீண்டும் வேட்பாளராகப் பரிசீலிக்காதது குறித்து சிபிஐ கட்சி மீது அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து முகுந்தன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
முன்னதாக, அவர் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். புது தில்லியில் கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், திருச்சூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகுந்தன் பாஜகவில் இணைந்தார்.
இதுதொடர்பாக முகுந்தன் கூறியாதவது,
எஸ்சி, எஸ்டி சமூகங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் பங்களிக்கும் ஆற்றல் கொண்ட கட்சி பாஜக. மேலும், பல மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்புடன் நான் இக்கட்சியில் இணைந்துள்ளேன்.
மக்களின் நலன்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்குச் சிறந்த அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதும் எனது விருப்பமாகும். பாஜகவிற்கு எப்போதும் விசுவாசத்துடன் இருப்பேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
நடைபெற உள்ள தேர்தலில் தான் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்ததை ஒப்புக்கொண்ட அவர், அக்கட்சியுடனான முயற்சி ஏன் கைகூடவில்லை என்பது தனக்குத் தெரியவில்லை.
நாட்டிகா தொகுதியில் போட்டியிட தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்காமல், அதற்குப் பதிலாக முன்னாள் எம்எல்ஏ கீதா கோபியைத் தேர்வு செய்த சிபிஐ தலைமை மீது முகுந்தன் கடந்த வாரம் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
முகுந்தன் பாஜகவில் இணைந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான ஏ.என். ராதாகிருஷ்ணன், பி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Summary
MLA C C Mukundan, who was expelled from the CPI, joined the BJP here on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் குதிரை பேரம் நல்லதல்ல: பாஜக கண்டனம்

பிரதமர் மோடி, அமித் ஷாவால் ஈர்க்கப்பட்டேன்: சுவாதி மாலிவால்!

பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு!

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


