மேற்கு வங்கத்தின் அசன்சோல் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பாலின் கார் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் தனது வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அசன்சோல் தெற்கு சட்டப்பேரவை, ரஹ்மத் நகர் அருகே பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பாலின் கார் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் காரின் பின் பக்கக் கண்ணாடிகள் நொறுங்கியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்னிமித்ரா பால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வாக்களித்து விட்டு வாக்குச்சாவடி வளாகத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது, எனது கார் மீது சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காரின் பின் பக்கக் கண்ணாடி நொறுங்கிவிட்டது.
இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இது தேர்தலைச் சீர்குலைக்கும் முயற்சியாகும். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், 152 தொகுதிகளில் நடைபெற்று வரும் முதல் கட்ட வாக்குப் பதிவின்போது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Summary
BJP candidate Agnimitra Paul's car was pelted with stones and its rear windowpanes were shattered near Rahmat Nagar in her Asansol Dakshin Assembly constituency on Thursday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் குதிரை பேரம் நல்லதல்ல: பாஜக கண்டனம்

எஸ்ஐஆரை பாராட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ: ராகுலின் நிலைப்பாடு குறித்து பாஜக விமா்சனம்
கார்கே மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்!
பிகார், உ.பி.யிலிருந்து வாக்காளர்கள் வரவழைப்பு: பாஜக மீது குற்றச்சாட்டு!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


