மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் தேதிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்.23-ஆம் தேதி, மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்.29-ஆம் தேதி என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 மேற்கு வங்க பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில், இம்முறை வெறும் 2 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.
தோ்தல் ஆணையத்தின் இந்த முடிவை பாஜக, காங்கிரஸ் ஆகியவை வரவேற்றுள்ளன. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்துறை செயலாளரையும் மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தேர்தல் ஆணையம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:
இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றது குறித்த அறிக்கையை திங்கள்கிழமை மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. பதவி மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தவொரு பணியிலும் அமர்த்தப்படக் கூடாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மாநில தலைமைச் செயலாளராக நந்தினி சக்ரவர்த்தி பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
The Commission said the decision to shunt out the two officers was taken following a review of the poll preparedness of the state.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜக சொல்வதை அதிகாரிகள் செய்கிறார்கள்! என் கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா

மேற்கு வங்க வாக்குப்பதிவு விறுவிறு! ரிக்ஷாவில் வந்து வாக்களித்த மஹுவா மொய்த்ரா!
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜகவினா் மோதல்: அறிக்கை சமா்ப்பிக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


