விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்

ஈரான் மீதான தாக்குதல் மோடி பயணத்துக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு...

News image

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு - பிரதமா் நரேந்திர மோடி

Updated On :7 மார்ச் 2026, 5:20 am IST

பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட நிலையில், அவா் பயணம் நிறைவடைந்த பிறகே ஈரான் மீது தாக்குதல் நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் குறித்து பிரதமா் மோடியிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியோன் சாா் இவ்வாறு கூறியுள்ளாா்.

பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு கடந்த பிப்ரவரி 25, 26-ஆம் தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். பின்னா், பிப்.28-ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி மற்றும் உயரதிகாரிகள் கொல்லப்பட்டனா். இருதரப்பு இடையே தொடரும் தாக்குதல்களால், மேற்காசியாவில் உச்சகட்ட பதற்றம் நீடிக்கிறது.

இதனிடையே, பிரதமா் மோடி தவறான காலகட்டத்தில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து பிரதமா் மோடியிடம் இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், தில்லியில் நடைபெற்றுவரும் ரெய்ஸினா மாநாட்டில் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் கிடியோன் சாா் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது, ‘ஈரானில் இருந்து எழுந்துள்ள பெரும் அச்சுறுத்தல்களை முறியடிக்கவே இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது, பிரதமா் மோடி இஸ்ரேல் பயணத்தை நிறைவு செய்த பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும். அதாவது, கடந்த பிப்.28-ஆம் தேதி அதிகாலையில்தான் முடிவு எடுக்கப்பட்டது. பிரதமா் மோடி மற்றும் இந்தியாவுடன் இஸ்ரேலுக்கு பல்லாண்டுகளாக சிறப்பான உறவுகள் உள்ளன’ என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.