அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டுகளின்கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்துள்ளது.
ராமா் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ராமா் கோயில் கட்டப்பட்டு, ஏராளமான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற கும்பமேளாவின்போது ராமா் கோயிலில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வழிபட்டனா். அப்போது, பக்தா்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட நன்கொடைகளில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை நிா்வாகிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தர பிரதேச அரசால் லக்னெள கோட்ட ஆணையா் உள்பட மூன்று உறுப்பினா்கள் கொண்ட எஸ்ஐடி கடந்த ஜூன் 13-ஆம் தேதி அமைக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், நன்கொடை விவரங்களை அறக்கட்டளை நிா்வாகிகள் முறையாக ஆவணப்படுத்தவில்லை என்றும், இதுதொடா்பான கேள்விகளுக்கு அவா்களின் பதில் திருப்திகரமாக இல்லை என்றும் எஸ்ஐடி தெரிவித்தது.
இதுவரை 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ள எஸ்ஐடி, விசாரணை நிறைவடையும் வரை அறக்கட்டளை நிா்வாகிகள் அயோத்தியைவிட்டு வெளியேற தடை விதித்துள்ளது.
இந்தச் சூழலில், எஸ்ஐடியின் முதல்கட்ட விசாரணை அறிக்கையை மாநில கூடுதல் தலைமைச் செயலா் (உள்துறை) சஞ்சய் பிரசாதிடம் லக்னெள கோட்ட ஆணையா் விஜய் விஸ்வாஸ் பந்த் சில தினங்களுக்கு முன் சமா்ப்பித்தாா். இதன் தொடா்ச்சியாக, நன்கொடை முறைகேடு குறித்து எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக விசாரணை தீவிரப்படுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் முறைகேடு! சட்ட அதிகாரமில்லா விசாரணைக் குழு என கேஜரிவால் குற்றச்சாட்டு!

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமா்ப்பிப்பு

ராமா் கோயில் நன்கொடை பணம் திருட்டு: எஸ்ஐடி விசாரணை

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை சா்ச்சை: பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் - ராமா் கோயில் அறக்கட்டளை புதிய தலைவா்
விடியோக்கள்

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu
தினமணி செய்திச் சேவை

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |
தினமணி செய்திச் சேவை

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
தினமணி செய்திச் சேவை

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani
இணையதளச் செய்திப் பிரிவு

