சூடானில் இருந்து தாயகம் வந்த கேரள பெண் ஒருவருக்கு எபோலா அறிகுறிகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதைத் தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தெற்கு சூடானில் இருந்து தாயகம் வந்தடைந்த கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் எபோலா தொற்றின் பரவலைத் தடுக்க நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு எபோலா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் எனும் சந்தேகத்தில் அவரை சுகாதார அதிகாரிகள் கோட்டயம் அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்புப் பிரிவில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆனால், அந்தப் பெண்ணுக்கு வெறும் காய்ச்சல் மட்டுமே இருப்பதாகவும், எபோலா தொற்றுக்கான பிற அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனவும் மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தப் பெண்ணிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக திருவனந்தபுரத்திலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த ஆய்வின் முடிவுகளில் எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டால், அடுத்தக்கட்ட சிகிச்சைக்காகத் தனி மருத்துவக் குழு உருவாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, காங்கோ, சூடான் உள்ளிட்ட நாடுகளில் எபோலா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், கடந்த மே 15 முதல் 676-க்கும் அதிகமானோர் எபோலா பாதிப்புகளால் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
A woman from Kerala who returned from Sudan is undergoing intensive treatment following suspected symptoms of Ebola.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!
பெங்களூரில் உகாண்டா பெண்ணுக்கு எபோலா பாதிப்பு இல்லை: மருத்துவப் பரிசோதனையில் தகவல்!
பெங்களூரில் உகாண்டாவைச் சேர்ந்த பெண்ணுக்கு எபோலா வைரஸ் பாதிப்பு?
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு


