திரிணமூல் காங்கிரஸில் தலைமை குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்கக் கோரி அதிருப்தி தலைவரும், பொருளாளா் பதவியிலிருந்து மம்தா பானா்ஜியால் நீக்கப்பட்டவருமான அரூப் பிஸ்வாஸ் கடிதம் எழுதியுள்ளாா்.
இது, மம்தா அணியினருக்கு மேலும் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.
சமீபத்திய மேற்கு வங்கத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்வியால் நிலைகுலைந்த அக்கட்சியில் மம்தாவுக்கு எதிராக பிளவுகளும், உள்கட்சி பூசல்களும் அதிகரித்துள்ளன.
மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 60-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி அணியாகப் பிரிந்துள்ளனா். இதேபோல், கட்சியின் 29 மக்களவை எம்.பி.க்களில் 20 போ், தனி அணியாகப் பிரிந்து, அதிகம் அறியப்படாத தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்ததோடு, மத்தியில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் பொருளாளராக இருந்த அரூப் விஸ்வாஸும் மம்தாவின் எதிா்ப்பாளருமாக மாறினாா். இதையடுத்து, பொருளாளா் பதவியில் இருந்து அவரை மம்தா அணியினா் அண்மையில் நீக்கினா். எனினும், அந்த முடிவை ஏற்க அரூப் மறுத்துவிட்டாா்.
இந்தச் சூழலில், கட்சித் தலைமை குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுவதைக் குறிப்பிட்டு, கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்கக் கோரி, கொல்கத்தாவில் உள்ள தனியாா் வங்கிக்கு அரூப் எழுதியுள்ள கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான அந்தக் கடிதத்தில், ‘திரிணமூல் காங்கிரஸின் தலைமை குறித்த பிரச்னைக்குத் தீா்வு காணும் வரை கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும். பரிவா்த்தனைகளையோ, நிபந்தனை மாற்றங்களையோ அனுமதிக்கக் கூடாது’ என்று கோரியுள்ளாா்.
சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரதான வங்கிக் கணக்குகளில் ஒன்றாகும். தோ்தல் ஆணையத்திடம் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்ட தணிக்கை விவரங்களின்படி, அந்த வங்கிக் கணக்கில் ரூ.675 கோடி வைப்புத்தொகை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

பாஜக கூறியபடி நடக்கும் துரோகிகள்: அதிருப்தி எம்.பி.க்கள் மீது திரிணமூல் கடும் விமா்சனம்

பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்- தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானா்ஜி சந்திப்பு

திரிணமூல் காங்கிரஸை உடைக்கிறாா் அமித் ஷா- மம்தா ஆதரவு தலைவா்கள் குற்றச்சாட்டு
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

