நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நீட் மறுதேர்வு: டெலிகிராம் செயலிக்கு தடை ஏன்? என்டிஏ இயக்குநர் விளக்கம்!

நீட் மறுதேர்வை முறையாக நடத்துவத்துவதற்காக டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டது ஏன் என்று என்டிஏ இயக்குநர் அளித்த விளக்கம் பற்றி...

News image

நீட் மறுதேர்வு: டெலிகிராம் செயலிக்கு தடை ஏன்? - படம் - தினமணி

Updated On :16 ஜூன் 2026, 3:41 pm IST

நீட் மறுதேர்வை முறையாக நடத்துவத்துவதற்காக டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து என்டிஏ இயக்குநர் அபிஷேக் சிங் செவ்வாய்க்கிழமை (ஜுன் 16) விளக்கம் அளித்துள்ளார்.

நீட் மறுதேர்வு வரும் ஜுன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிவதை தடுக்க டெலிகிராம் செயலிக்குத் தற்காலிக தடை விதித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று காலை உத்தரவிட்டது.

இதுகுறித்து அபிஷேக் சிங் பேசியதாவது:

மோசடிக்காரர்கள் மற்றும் ஏமாற்றுக்காரர்கள் சிலர் போலி வினாத்தாள்களை உண்மையானவை என்று கூறிப் பகிர்ந்து, அவற்றுக்குப் பணம் செலுத்துமாறு மக்களை ஏமாற்றி வருகின்றனர். மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக டெலிகிராம் செயலியைத் தவறாகப் பயன்படுத்தி வந்ததால் இந்தக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது.

எனவே, நாங்கள் டெலிகிராம் அதிகாரிகளைச் சந்தித்து, ”இது கசிந்த நீட் வினாத்தாள்” என்று கூறும் எந்த ஒரு குழுவையும் உருவாக்க அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். இதனால், நாங்கள் 200 குழுக்களை முடக்க வேண்டியிருந்தது. ஆனால், சில நேரங்களில் நடவடிக்கை மேற்கொள்வதற்குள் சிலர் ஏமாற்றப்படுகின்றனர்.

மே 3 ஆம் தேதி தேர்வின்போதும் இதுதான் நிகழ்ந்தது. சில டெலிகிராம் சேனல்கள் மே 1 ஆம் தேதியே மே 3 ஆம் தேதிக்கான உண்மையான வினாத்தாள் பகிரப்பட்டதாகக் காட்டும் ஒரு விடியோவைப் பரப்பி வருவதை நாங்கள் கண்டறிந்தோம்.

போதைப்பொருள், கிரிப்டோ, போலி முதலீட்டு ஆலோசனை, , பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றுக்காக டெலிகிராம் செயலி தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து அறிக்கைகள் உள்ளன. இவை தற்போது தேர்வுகளிலும் எதிரொலிக்கின்றன என்று அபிஷேக் சிங் தெரிவித்தார்.

Summary

NTA Director Abhishek Singh provided an explanation on Tuesday (June 16) regarding the reason for banning the Telegram app in order to properly conduct the NEET re-examination.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.