வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

News image

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி - ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

மாநிலச் செயலகமான 'நபன்னா' வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதேசமயம் சந்திப்பு குறித்த விரிவான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

எனினும், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ரிசர்வ் வங்கி ஆளுநருடனான சந்திப்பு குறித்த புகைப்படங்களை சுவேந்து அதிகாரி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் 208 தொகுதிகளில் வெற்றிபெற்று, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது.

அதைத்தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Reserve Bank of India (RBI) Governor Sanjay Malhotra on Saturday met West Bengal Chief Minister Suvendu Adhikari.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.