தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழையுடன் பலத்த காற்று வீசியதில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான இணைப்பு படிக்கட்டுகள் மோதியதில் ஏர் இந்தியா விமானங்கள் சேதமடைந்தன.
தில்லியில் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த நிலையில், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பயன்படுத்தப்படும் இண்டிகோ நிறுவனத்தின் படிக்கட்டுகள், பலத்த காற்றால் நகர்ந்து, ஏர் இந்தியாவின் விமானத்தின் மீது மோதியது.
இதனால், விமான நிலையத்தில் டெர்மினல் 2-ல் நிறுத்துமிடம் 206-ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியாவின் மூன்று விமானங்கள் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, மூன்று விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மழை, புயல் குறித்து வானிலை முன்னறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
எனினும், சேதமடைந்த விமானங்களில் இரண்டு விரைவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றும், மூன்றாவது விமானத்தைச் சரிசெய்ய சற்று கூடுதல் காலமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Rain accompanied by strong winds in Delhi! Three aircraft damaged!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்?

தில்லியில் தலாய் லாமாவுக்கு மருத்துவ சிகிச்சை!

இஸ்ரேலுக்கான விமான சேவை ஜூலை இறுதி வரை நிறுத்தம்: ஏர் இந்தியா தகவல்!

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: உள்நாட்டு விமான சேவையை குறைக்க ஏர் இந்தியா முடிவு!!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

