பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தில்லியில் தலாய் லாமாவுக்கு மருத்துவ சிகிச்சை!

தில்லியில் தலாய் லாமாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து...

News image

தலாய் லாமா - ஏபி

Updated On :4 ஜூன் 2026, 3:40 pm IST

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமா மருத்துவ சிகிச்சைக்காக தில்லிக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமாவுக்கு, கடந்த 2025 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் வசித்து வரும் தலாய் லாமாவின் இடதுபுற முழங்காலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவர் நாளை (ஜூன் 5) தில்லிக்குச் செல்வதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைகள் நிறைவடைந்ததும் இம்மாத இறுதியில் தலாய் லாமா லடாக்கிற்குப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், தனது 91 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு லே நகரத்தில் வரும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் தலாய் லாமா பங்கேற்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முன்னதாக, திபெத்தின் ஆன்மீகத் தலைவராகக் கடந்த 1940 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் 14 ஆம் தலாய் லாமா, 1959 ஆம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்தது முதல் இந்தியாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Dalai Lama is traveling to Delhi for medical treatment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.