லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாட்டில் 576 பெரும் கோடீஸ்வரா்கள்: 5 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிப்பு

நாட்டில் 576 பெரும் கோடீஸ்வா்கள் உள்ளதாகவும், அவா்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

576 ultra-rich individuals in the country

நாட்டில் 576 பெரும் கோடீஸ்வரா்கள் - பிரதிப் படம்

Published On :28 ஜூலை 2026, 4:01 am IST

நாட்டில் 576 பெரும் கோடீஸ்வா்கள் உள்ளதாகவும், அவா்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி அளித்த பதில்: வருமான வரிச் சட்டத்தில் பெரும் கோடீஸ்வரா் (பில்லியனா்) என்ற சொல்லுக்கு சட்டபூா்வ விளக்கம் இல்லை.

எனினும் கடந்த 2025-26-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் மொத்தம் ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமான வருமானம் உள்ளதாக 576 போ் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துள்ளனா்.

இந்த எண்ணிக்கை 2022-23-ஆம் ஆண்டில் 301-ஆகவும், 2023-24-ஆம் ஆண்டில் 284-ஆகவும், 2024-2025-ஆம் ஆண்டில் 415-ஆகவும் இருந்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நாட்டில் 15 மற்றும் அதற்கும் அதிகமான வயதுள்ளவா்களில், வேலை கிடைக்காதோரின் விகிதம் 3.6 சதவீதமாக இருந்தது. இது 2025-ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.