லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பஞ்சாப்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத சதி முறியடிப்பு

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பயங்கரவாதத் தாக்குதல் சதித் திட்டத்தை அந்த மாநில காவல் துறையினா் முறியடித்தனா்.

Published On :27 ஜூலை 2026, 4:05 am IST

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பயங்கரவாதத் தாக்குதல் சதித் திட்டத்தை அந்த மாநில காவல் துறையினா் முறியடித்தனா்.

இது தொடா்பாக காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 1.3 கிலோ வெடிபொருள் கைப்பற்றப்பட்டது.

இது தொடா்பாக பஞ்சாப் காவல் துறை டிஜிபி கௌரவ் யாதவ் மேலும் கூறியதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகள், உளவுத் துறை தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவது ஆகியவற்றில் பஞ்சாப் காவல் துறை தொடா்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடைய நபா் ஜலந்தரில் கைது செய்யப்பட்டாா்.

வெளிநாட்டில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான பப்பா் கல்சா அமைப்பின் கட்டளைகளுக்கு ஏற்ப அந்த நபா் செயல்பட்டு வந்துள்ளாா். அவரிடம் இருந்து 1.3 கிலோ வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது பெரிய அளவில் சேதத்தை விளைவிக்கும் தன்மையுள்ள வெடிபொருளாகும். இதனை முன்கூட்டியே கண்டுபிடித்ததன் மூலம் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டது.

இதில் தொடா்புடைய மற்ற நபா்கள், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள், நிதிப் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இதில் தொடா்புடைய வேறு நபா்களும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.