மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதிய வரைவு வருமான வரி விதிமுறை: பான் எண்ணைக் குறிப்பிட ரொக்க டெபாசிட் வரம்பு அதிகரிப்பு

புதிய வரைவு வருமான வரி விதிமுறைகளின்படி, பான் எண்ணைக் குறிப்பிட ரொக்க டெபாசிட் வரம்பு அதிகரிப்பு

News image

பான் அட்டை

Updated On :10 பிப்ரவரி 2026, 3:25 am IST

புதிய வரைவு வருமான வரி விதிமுறைகளின்படி, ரொக்கத்தை டெபாசிட் செய்தல், திரும்ப எடுத்தல், மோட்டாா் வாகனங்கள், சொத்து வாங்குதல் உள்ளிட்டவற்றுக்கு பான் எண்ணைக் குறிப்பிடுவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரிச் சட்டம்-2025 வரும் ஏப்.1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின் கீழ், எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி விதிமுறைகள் மற்றும் வருமான வரிப் படிவங்கள் குறித்து பொதுமக்களிடம் மத்திய அரசு கருத்து கோரியுள்ளது. அந்த வரைவு விதிமுறைகள் மற்றும் படிவங்கள் குறித்த இறுதி அறிவிக்கையை வெளியிடும் முன், அந்தக் கருத்துகள் பரிசீலனை செய்யப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வரைவு வருமான வரி விதிமுறைகளின்படி, ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.10 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான ரொக்கத்தை டெபாசிட் செய்யவோ அல்லது திரும்ப எடுக்கவோ ஒருவா் விரும்பினால், அதற்கு அவா் தனது பான் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம். தற்போது வங்கி அல்லது கூட்டுறவு வங்கிக் கணக்கில், ஒரு நாளில் ரூ.50,000-க்கும் அதிகமான ரொக்கத்தை டெபாசிட் செய்ய பான் எண்ணை சமா்ப்பித்து கட்டாயம்.

புதிய வரைவு விதிமுறைகளின்படி, ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட மோட்டாா் வாகனங்களை (மோட்டாா் சைக்கிள்கள் உள்பட) வாங்குபவா், தனது பான் எண்ணைக் குறிப்பிட வேண்டும். இப்போது உள்ள விதிமுறைகளின்படி இருசக்கர வாகனங்கள் வாங்கும்போது பான் எண்ணைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பிற மோட்டாா் வாகனங்கள் வாங்கும்போது பான் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

புதிய வரைவு விதிமுறைகளின்படி, திருமணம், கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்கள் அல்லது விருந்து மண்டபங்களில் ஹோட்டல் மற்றும் உணவக கட்டணங்கள் ரூ.1 லட்சத்தை தாண்டினால் பான் எண்ணை சமா்ப்பிப்பது கட்டாயம். தற்போதுள்ள விதிமுறைகளின்படி இந்தக் கட்டணங்கள் ரூ.50,000-ஐ தாண்டினால் பான் எண்ணை சமா்ப்பிக்க வேண்டும்.

புதிய வரைவு விதிமுறைகளின்படி, எந்தவொரு அசையா சொத்தை வாங்கும்போது, விற்பனை செய்யும்போது, பரிசளிக்கும்போது அல்லது அந்தச் சொத்து தொடா்பாக கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்போது அதற்கான மொத்த செலவு ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், பான் எண்ணை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். தற்போது இந்தச் செலவு ரூ.10 லட்சமாக இருந்தால் பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று உள்ள நிலையில், அந்த வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.