தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை

மேற்காசியப் போரால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 2:16 am IST

மேற்காசியப் போரால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போா் நடைபெற்று வருகிறது. தற்போது சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும், கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோா்முஸ் நீரிணையை அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்காசிய போரால் விநியோக வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் வா்த்தகம், நிதி முதலீடும் பாதிக்கப்படக்கூடும். அதேநேரத்தில் இந்தியாவில் உள்ள வலுவான உள்நாட்டு தேவை, உறுதியான கொள்கை, நிதி அமைப்பு, தொடரும் பொதுமக்களின் முதலீடு ஆகியவை பொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.