தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் பதிவு: மத்திய அரசு முக்கிய முடிவு

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 4:09 am IST

படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் தீப்பிடித்ததை முன்கூட்டியே கண்டறியும் கருவிகள், அவசர காலங்களில் வெளியேறும் வழிகள் ஆகியவை உள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்யாமல், அந்தப் பேருந்துகள் பதிவு செய்யப்படாது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு கூறியதாவது:

பேருந்துகளில் அதிகரிக்கும் தீ விபத்து சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது மையங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பேருந்துகளில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு மிக மிக முக்கியமாகும். பேருந்து வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு சாா்ந்த புதிய விதிமுறைகளின்படி, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் தீப்பிடித்ததை முன்கூட்டியே கண்டறியும் கருவிகள், சுத்தியல்களுடன் அவசர காலங்களில் வெளியேறும் வழிகள், அவசர கால விளக்குகள் உள்ளதா என்பது நேரிலும், காணொலி வழியாகவும் ஆய்வு செய்யப்படாவிட்டால், அந்தப் பேருந்துகள் பதிவு செய்யப்படாது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.