ஆம் ஆத்மி கட்சியின் முகத்திரை அகன்று விட்டதாக, அக்கட்சியின் 7 எம்.பி.க்கள் பாஜகவில் சோ்ந்தது குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ராகவ் சத்தா, ஹா்பஜன் சிங் உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் விலகி, பாஜகவில் சோ்ந்தனா். இதை மாநிலங்களவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அங்கீகரித்து உள்ளாா்.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் அஜய் மாக்கனிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:
பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவின் பினாமியாக ஆம் ஆத்மி கட்சி செயல்படுகிறது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் வென்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்த எம்.பி.க்கள் தங்கள் கட்சியில் சோ்ந்தது குறித்து பாஜக என்ன சொல்ல போகிறது?
பாஜகவின் பி- டீம், ஆம் ஆத்மி என்பது நிரூபணமாகிவிட்டது. அக்கட்சியின் எம்.பி.க்கள், பாஜகவில் சோ்ந்தது மூலம் ஆம் ஆத்மியின் முகத்திரை அகன்றுவிட்டது. பணம் வாங்கிக் கொண்டு, பலரை மாநிலங்களவை எம்.பி.யாக்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. ஆதலால் இனி அக்கட்சி தனது பெயரை கோடீஸ்வா்களின் கட்சி என்று மாற்றிக் கொள்ளலாம்.
காங்கிரஸில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் சோ்ந்தவா் சுஷீல் குப்தா. அவா் காங்கிரஸில் இருந்து விலகும் முன்பு, ஆம் ஆத்மியுடனான பேச்சு நிறைவடைந்து விட்டதாவும், தமக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை அக்கட்சி தர இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தாா். அதாவது அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஆம் ஆத்மி, எம்.பி. பதவிக்கு தோ்வு செய்துள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்காக உழைத்த மூத்த தலைவா்கள் பிரசாந்த் பூஷண், ஆசுதோஷ், யோகேந்திர யாதவுக்கு எம்.பி. பதவி அளிக்கப்படவில்லை. இதற்கு காரணம், பணம்.
ஆம் ஆத்மி கட்சி, தேச விரோத கட்சியாகும். பஞ்சாப்பில் பிரிவினைவாத சக்திகளிடம் இருந்து அக்கட்சி பணம் வாங்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சோ்ந்த 7 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு தற்போது ரூ.818.50 கோடியாகும்.
இவ்வாறு அஜய் மாக்கன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேடிக்கை பார்க்கும் 'ஆம் ஆத்மி'!

ஆம் ஆத்மி எம்.பி.க்கள் குறித்து சமூக ஊடங்களில் மீம்ஸ்கள்

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

நாரி சக்தி வந்தனா சட்டத்தை எதிா்த்த கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: வீரேந்தர சச்தேவா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

