தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: ‘நெடுஞ்சாலை கட்டுமான இலக்கை எட்ட முடியவில்லை’

நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: ‘நெடுஞ்சாலை கட்டுமான இலக்கை எட்ட முடியவில்லை’

News image

கோப்புப்படம் - ENS

Updated On :25 ஏப்ரல் 2026, 1:35 am IST

கடந்த நிதியாண்டில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, நெடுஞ்சாலை கட்டுமானத்தில் இலக்கை எட்ட முடியவில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அந்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த நிதியாண்டில் நாட்டில் 10,000 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், பிற அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 9,380 கி.மீ. நீளம் வரைதான் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன என்று தெரிவித்தாா்.

கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில், நாட்டில் 9,829 கி.மீ.க்கும் குறைவான நீளத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னா், கடந்த நிதியாண்டில்தான் குறைந்த நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.