இணைய விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் மே 1-ஆம் தேதி முதல் அமலாவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கான விதிகளை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.
இதுதொடா்பாக தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் எஸ்.கிருஷ்ணன் கூறியதாவது: ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட இணையவழி சூதாட்ட விளையாட்டுகள் தவிர பிற இணைய விளையாட்டுகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த விளையாட்டுகளை விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் பதிவுசெய்யும் விதமாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஒரு விளையாட்டை இணைய சூதாட்ட விளையாட்டு அல்லது இணைய சமூக விளையாட்டு என விண்ணப்பிக்க நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை.
பயனா் அம்சங்கள் குறித்து விதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இணைய சூதாட்ட விளையாட்டுகளுக்கு இந்தச் சட்டம் தடை விதிக்கும் அதேவேளையில் மின்னணு விளையாட்டுகள் மற்றும் இணைய சமூக விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது என்றாா்.
கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தச் சட்டத்தின் மீது மத்திய மின்னணு அமைச்சகம் கருத்து கேட்ட நிலையில் தற்போது இணைய விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்துக்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை மே 1-ஆம் தேதி முதல் அமலாகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 11 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்: சென்னை ஆட்சியா்

மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

