எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் முறை, அதனை விநியோகிக்கும் முறைகளில் புதிய விதிமுறைகள் மே 1 முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால், ஏற்கனவே, சிலிண்டர் முன்பதிவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மே 1ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன.
ஈரான் - அமெரிக்க போர் தொடங்கிய பிறகு, வீட்டு உபயோக சிலிண்டர் விலைகள் ரூ.60 வரை உயர்ந்தது. வணிக சிலிண்டர்கள் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டது. அதாவது ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.196 முதல் ரூ.218 வரை நகரங்களுக்கு ஏற்ப விலை உயர்ந்தது.
அதாவது, ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்து, அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய நகரங்களில் குறைந்தபட்சம் 21 நாள்கள் என்று இருந்தது தற்போது 25 நாள்கள் வரை உயர்த்தப்பட்டது. கிராமப் பகுதிகளில் இது 45 நாள்கள் வரை உயர்த்தப்படுகிறது.
ஏற்கனவே ஓடிபியை அடிப்படையாக வைத்து சிலிண்டர் விநியோகம் தற்காலிக அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. இனி இது நிரந்தரமாக மாற்றப்படும்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர், ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் சோதனையை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுவரை வாடிக்கையாளர்கள் அடையாளத்தை உறுதி செய்யாவிட்டால் அவர்களுக்கு இ-கேஒய்சி அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
ஏற்கனவே பயோமெட்ரிக் உறுதி செய்தவர்கள் மீண்டும் அதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஆனால் உஜ்வாலா திட்டப் பயனாளர்கள் மட்டும் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் பயோமெட்ரிக் உறுதி செய்வது அவசியம்.
சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி விரைவில் குழாய் மூலம் எரிவாயு விநியோகத்தை உருவாக்க மத்திய அரசு முயன்று வருகிறது. அவ்வாறு குழாய் மூலம் எரிவாயு சேவை பெறுவோர் சிலிணிடர்களை திரும்ப அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.
போர் தொடங்கியதிலிருந்து வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் சீராக இருக்க மத்திய, மாநில அரசுகள் முன் முயற்சி செய்து வருகின்றன.
Summary
New rules for cooking gas cylinder booking system from May 1!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3 நாள்களில் 1.40 கோடி சிலிண்டர் முன்பதிவுகள்: மத்திய அமைச்சகம்

உஜ்வாலா திட்டம்: சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை 4ஆக குறைப்பு!

வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்களில் விலை மேலும் அதிகரிப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

