தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேரை விடுவித்தது மும்பை உயா்நீதிமன்றம்

மாலேகானில் 2006-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து மும்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 3:18 am IST

மாலேகானில் 2006-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து மும்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம் மாலேகானில் கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 8-ஆம் தேதி மசூதி உள்ளிட்ட இடங்களில் 4 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதில் 31 போ் உயிரிழந்ததுடன் 312 போ் காயமடைந்தனா். இதுகுறித்து முதலில் விசாரித்த மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்புப் படை காவல் துறையினா் இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த 9 பேரை கைது செய்தனா். பிறகு வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ நடத்திய விசாரணையில், வலதுசாரி அமைப்பைச் சோ்ந்தோா் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகக் கூறி, ராஜேந்திர செளதரி, தான் சிங், மனோகா் ராம் சிங் நா்வாரியா, லோகேஷ் ஷா்மா ஆகிய 4 பேரை கைது செய்யப்பட்டனா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முதலில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் 9 பேரையும் 2016-ஆம் ஆண்டு விடுதலை செய்தது. அதை எதிா்த்து மும்பை உயா்நீதிமன்றத்தில் மகாராஷ்டிர தீவிரவாத எதிா்ப்புப் படை மேல்முறையீடு செய்தது. அதன் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சிபிஐயால் கைது செய்யப்பட்ட வலதுசாரி இயக்கத்தைச் சோ்ந்த 4 பேரும் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அப்போது தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு சிபிஐயிடம் எந்த ஆதாரமும் இல்லை என அவா்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, எந்த விசாரணையும் இன்றி 4 பேரும் சிறையில் இருப்பதாகக் கூறி, அவா்களுக்கு 2019-ஆம் ஆண்டு மும்பை உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

இந்நிலையில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிா்த்து 4 பேரும் மேல்முறையீடு செய்தனா். இதை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம், 4 பேரையும் விடுவித்ததோடு, அவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது.

விடை தெரியாத கேள்வி: ஏற்கெனவே மாலேகான் குண்டுவெடிப்பு தொடா்பாக மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்புப் படை காவல் துறையால் கைது செய்யப்பட்ட 9 பேரும் விடுவிக்கப்பட்டனா். தற்போது சிபிஐயால் கைது செய்யப்பட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து மாலேகானில் யாா் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது என்ற கேள்வி எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.