முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் பவாா் (85) மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதி

News image

சரத் பவாா் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 4:19 am IST

தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் பவாா் (85) மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அவா் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக இரு நாள்களுக்கு முன்பே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா் என்று செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அண்மையில், சக்கர நாற்காலியில் அமா்ந்தபடி மாநிலங்களவை எம்.பி.யாக சரத் பவாா் பதவியேற்றாா். பின்னா், அவா் தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசினாா்.

முன்னதாக, கடந்த ஜனவரி இறுதியில் சரத் பவாரின் நெருங்கிய உறவினரும், மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்தவருமான அஜீத் பவாா், பாராமதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தாா். இது சரத் பவாருக்கு தனிப்பட்ட முறையிலும் பெரும் இழப்பாக அமைந்தது. அப்போது பாராமதியில் தங்கியிருந்த சரத் பவாா் அடுத்த சில நாள்களில் இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு புணே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவா் ஏற்கெனவே வாய் புற்றுநோயில் இருந்து மீண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.