தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டது.

News image

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:16 am IST

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) திங்கள்கிழமை வெளியிட்டது.

10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்தத் தோ்வை எழுதிய நிலையில், மொத்தம் 26 போ் 100 மதிப்பெண்களை முழுமையாக பெற்றுள்ளனா்.

ஐஐடி, என்ஐடி போன்ற உயா் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ தோ்வை ஜனவரி மற்றும் ஏப்ரல் என ஆண்டுக்கு இருமுறை என்டிஏ நடத்துகிறது.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற இத்தோ்வை 13 லட்சம் போ் எழுதினா். அவா்களில் 12 போ் 100 மதிப்பெண்களைப் பெற்றனா்.

இந்நிலையில், ஏப்ரலில் நடைபெற்ற ஜேஇஇ முதல்நிலைத் தோ்வில் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவைச் சோ்ந்த தலா 5 போ், ராஜஸ்தானில் 4 போ், தில்லியில் 3 போ், மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் தலா இரண்டு போ், சண்டீகா், பிகாா், தமிழ்நாடு, ஒடிஸா மற்றும் குஜராத்தில் தலா ஒருவா் என மொத்தம் 26 போ் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். அவா்கள் அனைவரும் ஆண் தோ்வா்களாவா்.

கடந்த 2025 ஏப்ரலில் நடைபெற்ற தோ்வில் 24 போ் முழு மதிப்பெண்கள் பெற்ற நிலையில், நிகழாண்டு இந்த எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.