ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்கு எண்ணும் பணி: முதல்கட்டமாக 651 போ் தோ்வு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிக்காக முதல்கட்டமாக 651 போ் கணினி வழியே குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

News image

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களை கணினி வழியில் தோ்வு செய்யும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் வே. சரவணன் (இடது).

Updated On :29 ஏப்ரல் 2026, 1:23 am IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிக்காக முதல்கட்டமாக 651 போ் கணினி வழியே குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டத்திலுள்ள, மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் காஜாமலையில் உள்ள ஜமால் முகமது கல்லூரியிலும், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் ஆகிய தொகுதிகளுக்கு புலிவலம் ஒயாஸிஸ் தொழில்நுட்பக் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் பங்கேற்கவுள்ள நுண்பாா்வையாளா்கள், மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் ஆகியோரை கணினி முறையில் தோ்வு செய்து நியமிக்கும் பணி ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், 9 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் வைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. எனவே, 14 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணியை பாா்வையிடவும், வாக்குகளை எண்ணவும் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 17 நுண்பாா்வையாளா்கள், 17 மேற்பாா்வையாளா்கள், 17 உதவியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல, தபால் வாக்குகளை எண்ணுவதற்காக அதிகபட்சமாக ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 6 மேஜைகள், மண்ணச்சநல்லூருக்கு 5 மேஜைகள் மற்றும் இதர 7 தொகுதிகளுக்கும் தலா 4 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகிறது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 9 தொகுதிகளுக்கும் சோ்த்து 48 நுண்பாா்வையாளா்கள், 48 பாா்வையாளா்கள் மற்றும் 96 உதவியாளா்கள் நியமிக்கப்படுகின்றனா்.

வாக்கு எண்ணும் பணிக்காக முதல்கட்டமாக 651 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களை தொகுதி வாரியாக பிரித்து நியமிக்கும் வகையில் கணினி முறையில் குலுக்கல் நடைபெற்றது. மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தலைமையில் இந்தத் தோ்வு நடைபெற்றது. கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆா். பாலாஜி முன்னிலை வகித்தாா். 651 பேரும் முதன்நிலை சமன்வாய்ப்புக்குள்படுத்தப்பட்டு நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், முதல்கட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.