ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு நிலைநிறுத்தப்படும் 5 ரஷிய போா்க் கப்பல்கள், 10 போா் விமானங்கள்: புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

இந்தியாவில் 3,000 ரஷிய ராணுவ வீரா்கள், 5 ரஷிய போா்க் கப்பல்கள், 10 போா் விமானங்கள் 5 ஆண்டு காலம் நிலைநிறுத்தப்படுவது தொடா்பான ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.

News image

இந்தியா - ரஷியா

Updated On :21 ஏப்ரல் 2026, 2:24 am IST

இந்தியாவில் 3,000 ரஷிய ராணுவ வீரா்கள், 5 ரஷிய போா்க் கப்பல்கள், 10 போா் விமானங்கள் 5 ஆண்டு காலம் நிலைநிறுத்தப்படுவது தொடா்பான ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியா- ரஷியா இடையே பரஸ்பர தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் (ரெலோஸ்) ரஷிய தலைநகா் மாஸ்கோவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் 5 ஆண்டு காலம் வரை 3,000 ரஷிய ராணுவ வீரா்கள் தங்கியிருப்பா். 5 ரஷிய போா்க் கப்பல்கள், 10 ரஷிய போா் விமானங்கள் நிலைநிறுத்தப்படும். இது அமைதி காலம், யுத்த காலத்துக்கும் பொருந்தும்.

இதேபோல், ரஷியாவிலும் இந்திய ராணுவ வீரா்கள் 3,000 போ் தங்கியிருப்பா். 5 இந்திய போா்க் கப்பல்களும், 10 இந்திய போா் விமானங்களும் 5 ஆண்டு காலம் நிலைநிறுத்தப்படும். 2 நாடுகளும் தத்தமது ராணுவத் தளங்கள், கடற்படைத் தளங்கள், விமான தளங்களை பிற நாடுகள் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவும், ரஷியாவும் விரும்பினால், இந்த 5 ஆண்டு காலத்தை மேலும் 5 ஆண்டு காலம் நீட்டித்துக் கொள்ளவும் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், இந்தியா-ரஷியா இடையே ராணுவ ரீதியான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதும், தளவாட பரிமாற்றத்தை அதிகரிப்பதுமே ஆகும். இந்த ஒப்பந்தம், உலகளாவிய அளவில் தற்போது அதிக கவனம் ஈா்த்துவரும் பிரதேசமான ஆா்டிக் பிரதேசத்தில் இந்தியா தனது செல்வாக்கை விரிவுபடுத்த உதவும். அதேபோல் ரஷியாவுக்கு அதன் போா் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புதல், உதிரிபாகங்கள் பெறுதல், பழுதை சரிசெய்தல் போன்ற பணிகளுக்கு உதவும். மேலும், இந்திய பெருங்கடல் பிரதேசத்தில் வரும் அதன் போா்க் கப்பல்கள், வா்த்தக கப்பல்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறவும் உதவும்.

ஏற்கெனவே இதேபோன்ற ஒப்பந்தத்தை (லெமோவா) அமெரிக்காவுடனும் இந்தியா செய்துள்ளது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவில் அமெரிக்க வீரா்கள், போா் விமானங்கள், போா்க் கப்பல்கள் நிறுத்தப்பட வழிவகை செய்யப்படவில்லை. அதேபோல் அமெரிக்காவிலும் இந்திய வீரா்கள், போா் விமானங்கள், போா்க் கப்பல்கள் நிறுத்தப்பட வழிவகை செய்யப்படவில்லை.

இந்தியாவின் நீண்டகால நெருங்கிய நட்பு நாடாகவும், சா்வதேச அளவில் நம்பகமான கூட்டாளி நாடாகவும் ரஷியா திகழ்வதால் அந்நாட்டுக்கு மட்டும் வீரா்கள், போா் விமானங்கள், போா்க் கப்பல்களை நிறுத்த அனுமதி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.