தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு சேவையளிக்கவும், போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழிநுட்பத்தை அறிமுகம் செய்யவும் இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி பொறியியல் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

News image

ரஃபேல் ஜெட் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பிய காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 2:21 am IST

இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு சேவையளிக்கவும், போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழிநுட்பத்தை அறிமுகம் செய்யவும் இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி பொறியியல் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மும்பையைச் சோ்ந்த பாராஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் அமெரிக்காவைச் சோ்ந்த பண்டக் விமான தொழில்நுட்ப டிபிஏ நாா்த்ஸ்டாா் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பம் கையொப்பமாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்புவதற்கான தொழில்நுட்பம் உள்பட நவீன தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை அமெரிக்க நிறுவனம் விநியோகிப்பதோடு, தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கும்.

விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்வதில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான அமெரிக்காவின் நாா்த்ஸ்டாா் திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பாராஸ் நிறுவன இயக்குநா் அமித் மஹாஜன் கூறுகையில், ‘இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு சேவையளிக்கும் நோக்கில், வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், இத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் முதல் நிறுவனமாக பாராஸ் திகழும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.