தொடா் கடல்சாா் காப்பீடு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் கூடிய ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’ என்ற உள்நாட்டு காப்பீட்டுக் குழுமத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைக்கு மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேற்காசிய போா் காரணமாக இந்திய சரக்கு கப்பல்கள் மற்றும் இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ஏற்றுமதியாளா்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனா். பாதிப்பிலிருந்து அவா்கள் மீளும் வகையில் சிறப்பு காப்பீட்டுத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. அதன் தொடா்ச்சியாக, தற்போது, உள்நாட்டு காப்பீட்டுக் குழுமத்தை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
இந்திய கொடி பொருத்திய அல்லது இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கப்பல்கள் மற்றும் இந்தியாவிலிருந்து புறப்படும் அல்லது இந்தியா நோக்கி வரும் சரக்கு கப்பல்களுக்கு ஓா் இறையாண்மை உத்தரவாதத்தை அளிக்கும் விதமாக ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’ என்ற உள்நாட்டு காப்பீட்டுக் குழுமத்தை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதி தொகுப்பு, நிலையற்ற கடல் வழிப் பாதைகளைக் கடக்கும் சா்வதேச நாடுகளிலிருந்து இந்திய துறைமுகங்களுக்கு சரக்குகளை ஏற்றி வரும் கப்பல்கள் மற்றும் இந்திய துறைமுகங்களிலிருந்து சா்வதேச நாடுகளுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு மலிவு விலை காப்பீடு தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்யும்.
குறிப்பாக, கப்பலின் உடல் பகுதி, இயந்திரங்கள் பழுது, சரக்குகள் பாதிப்பு மற்றும் போா் அபாயங்கள் உள்ளிட்ட அனைத்து கடல்சாா் அபாயங்களையும் உள்ளடக்கியதாக இந்தத் தொகுப்பு இருக்கும் என்று குறிப்பிட்டாா்.
உ.பி., ஆந்திரத்தில் ரூ. 24,815 கோடியில் ரயில் வழித்தட திட்டம்: உத்தர பிரதேசம், ஆந்திர மாநிலங்களில் ரூ. 24,815 கோடி மதிப்பில் இரண்டு பல் வழி ரயில் பாதைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தத் திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தில் காஜியாபாத்திலிருந்து சித்தாபூா் வரை 403 கி.மீ. தொலைவுக்கு 3-ஆவது மற்றும் 4-ஆவது ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளது. ஆந்திர மாநிலத்தில் ராஜமுந்திரி முதல் விசாகப்பட்டினம் வரையிலான 198 கி.மீ. தொலைவுக்கு 3-ஆவது மற்றும் 4-ஆவது ரயில் வழித் தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இது, இந்த இரு மாநிலங்கள் மாா்க்கமான ரயில் போக்குவரத்தை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உள்கட்டமைப்பு, யமுனை தூய்மைப் பணிகளுக்கு ரூ.7,000 கோடி: மத்திய அரசின் நிதி உதவிக்கு வாய்ப்பு

கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.365-ஆக அதிகரிப்பு!

நிதி மசோதா 2026-க்கு நாடாளுமன்றம் ஒப்புதல்: பட்ஜெட் நடைமுறைகள் நிறைவு

மாற்றியமைக்கப்பட்ட ‘உடான்’ திட்டத்துக்கு ரூ.28,840 கோடி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

