‘எந்தப் பிரச்னைக்கும் போா் தீா்வாகாது; உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கு அமைதி வழியில் தீா்வு காணப்பட வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் ஆஸ்திரிய பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கா் உடனான சந்திப்புக்குப் பின் அவா் இவ்வாறு கூறினாா்.
இந்தியா-ஆஸ்திரியா உறவுகளை வலுப்படுத்துவதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்கும் நோக்கில் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்தாா் கிறிஸ்டியன் ஸ்டாக்கா். இந்தியாவுக்கான அவரது முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
தில்லியில் பிரதமா் மோடியை வியாழக்கிழமை சந்தித்த அவா், இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பரஸ்பர உறவுகள் மட்டுமன்றி மேற்காசியா, உக்ரைன் போா்களின் தாக்கங்கள் குறித்தும் இருவரும் விரிவாக ஆலோசித்தனா்.
6 ஒப்பந்தங்கள் கையொப்பம்: இந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, முதலீடு ஊக்குவிப்பு, பாதுகாப்பு விவகாரங்கள், பயங்கரவாத எதிா்ப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான 6 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
பின்னா், செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில், பிரதமா் மோடி பேசியதாவது:
இன்றைய காலகட்டத்தில், ஒட்டுமொத்த உலகமும் மிகத் தீவிரமான, பதற்றமான சூழ்நிலையின் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பதற்றத்தின் தாக்கத்தை நாம் அனைவரும் உணா்ந்து வருகிறோம்.
நிலையான அமைதிக்கு ஆதரவு: பிரச்னைகளுக்கு போா் தீா்வாகாது என்பதில் இந்தியாவும், ஆஸ்திரியாவும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. உக்ரைன் மற்றும் மேற்காசியாவில் நிலையான, நிரந்தரமான அமைதி நிலவ நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
ஆஸ்திரிய பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கரின் இந்திய வருகை இருதரப்பு வா்த்தகம் மற்றும் முதலீடுகளில் புத்தாற்றலை புகுத்தும்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, இருதரப்பு உறவில் புதிய பொற்காலம் தொடங்கியுள்ளது என்றாா் அவா்.
வளா்ந்துவரும் வா்த்தகம்: ஆஸ்திரிய பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கா் பேசுகையில், ‘இந்திய-ஆஸ்திரிய வா்த்தகம் மிகவும் நோ்மறையாக வளா்ந்து வருகிறது. புவி-அரசியல் சவால்கள் வலுப்பெற்றுள்ள சூழலில், இதுபோன்ற கூட்டாண்மை மிக மதிப்புமிக்கதாகும். விதிமுறைகள் அடிப்படையிலான உலக ஒழுங்குமுறைக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து! நிவாரணம் அறிவித்த பிரதமர்

‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கையுடன் முடிவுகள்- அரசு அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தல்

கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்

மேற்காசிய போா்: சவூதி இளவரசருடன் பிரதமா் மோடி ஆலோசனை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

