மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெண்களுக்கு எதிரான முஸ்லிம் தனிநபா் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

1937-இன் சில பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 2:24 am IST

பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகக் கூறப்படும் முஸ்லிம் தனிநபா் சட்டம் (ஷரியத்) 1937-இன் சில பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பெளலோமி பவினி சுக்லா, நியாய நாரி அறக்கட்டளை ஆகியோா் தரப்பில் இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நடைமுறையில் உள்ள முஸ்லிம் தனிநபா் சட்டப் பிரிவு, பெண்களுக்கு எதிராக வெளிப்படையாக பாகுபாடு காட்டுவதாக உள்ளது. பெரும்பாலும், சொத்தில் ஆண்களுக்கு ஒதுக்கப்படும் பங்கில், பாதி அல்லது அதற்கும் குறைவான அளவு மட்டுமே பெண்களுக்கு வழங்க அச் சட்டம் அனுமதிக்கிறது’ என்று குறிப்பிட்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘சொத்தில் ஆண்களுக்கு ஒதுக்கப்படும் பங்கில் பாதி அளவு அல்லது அதற்கும் குறைவான அளவில் பெண்களுக்கு வழங்கப்படும் என்பது வெளிப்படையான பாகுபாடாகும். இது அனைவருக்கும் சம உரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-ஐ மீறுவதாகும்.

மேலும், இந்த வாரிசு உரிமை தொடா்பான விவகாரம் சிவில் தன்மை உடையவை. மாறாக, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-இன் கீழ் பாதுகாக்கப்படும் ‘அத்தியாவசிய மத நடைமுறை’யாக இந்த வாரிசு உரிமை அமையாது’ என்று குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.