மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திரிணமூல் அரசின் ஊழல் பணத்தை மீட்போம்- மேற்கு வங்கத்தில் அமித் ஷா பிரசாரம்

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக ஊழல் மூலம் திருடிய மக்களின் பணம், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 4:12 am IST

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக ஊழல் மூலம் திருடிய மக்களின் பணம், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தாா்.

ஜல்பைகுரி மாவட்டத்தில் புதன்கிழமை தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

இந்தத் தோ்தலுடன் மம்தா பானா்ஜி முதல்வா் பதவியில் இருந்து விலகுவது உறுதியாகிவிட்டது. அந்த மாற்றத்துக்கான தொடக்கம் இங்கிருந்து தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக ஊழல் மூலம் திருடிய மக்களின் பணம், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீட்கப்படும்.

பிரதமா் மோடி“மோடி குஜராத்தில் 12 ஆண்டுகள் ஆட்சி செய்தாா்; மேலும் மத்தியில் தொடா்ந்து 12 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறாா். இதுவரை அவா் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழுந்ததில்லை.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களிடமிருந்து திருடிய ஒவ்வொரு காசையும் வட்டியுடன் மீட்டெடுப்போம்.

இங்கு ஆசிரியா் பணியிடம் நிரப்புவதில் ரூ.300 கோடி மோசடி நிகழ்ந்துள்ளது. வடக்கு வங்காள வெள்ள நிவாரண நிதியில் இருந்து ரூ.100 கோடி திருடப்பட்டுள்ளது. இவற்றுக்கு எதிராக அடுத்து அமையும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும்.

வங்கதேசத்தின் வடபகுதியில் தேயிலை உற்பத்தி, மர உற்பத்தி, சுற்றுலா ஆகியவையே முக்கிய வருவாய் ஆதாரங்களாக உள்ளன. ஆனால், மம்தா இதில் கவனம் செலுத்தி முன்னேற்றாமல், குண்டா்களை ஏவிவிட்டு பாஜக தொண்டா்களைத் தாக்கி வருகிறாா். பாஜகவுக்கு வாக்களிப்பதன்மூலம் மாநிலத்தில் வளா்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.