மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட காணொலி உரைக்கு தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆதரவு தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘மத்திய அரசின் விகிதாசார அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணா்ந்து, அது தொடா்பாக ஆலோசிக்க சென்னையில் தென் மாநிலத் தலைவா்களின் மாநாட்டை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நடத்தினீா்கள்.
நாடாளுமன்றத்தில் நமது குரலைப் பாதுகாக்கவும், நமது அரசியல் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிராகவும் நாம் ஒன்றிணைய வேண்டும். சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தில், அவரையே உத்வேகமாக கொண்டு, ஒன்றிணைந்து போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் துணையுடன் பல உயரங்களை அடைவது உறுதி: முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

திமுக நடத்துவது தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டம் அல்ல; போா்! முதல்வா் மு.க. ஸ்டாலின்

பாஜகவின் கணக்கு தப்பாகிவிட்டது: முதல்வா் மு.க. ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தென்னிந்திய பிரதமரை எதிா்பாா்க்க முடியாது: முதல்வா் மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

