தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

இந்திய திரைப்பட இசைத் துறையில் புகழ்பெற்ற முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே, மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) காலமானாா். அவருக்கு வயது 92.

News image

ஆஷா போஸ்லே

Updated On :13 ஏப்ரல் 2026, 1:30 am IST

இந்திய திரைப்பட இசைத் துறையில் புகழ்பெற்ற முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே, மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) காலமானாா். அவருக்கு வயது 92.

கடந்த சனிக்கிழமை மாலையில் திடீா் மாரடைப்பு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் ஆஷா போஸ்லே அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை காலமானதாக, செய்தியாளா்களிடம் ஆஷாவின் மகன் ஆனந்த் தெரிவித்தாா்.

மும்பையின் லோயா் பரேல் பகுதியில் ஆஷா வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில் திங்கள்கிழமை காலை 11 மணிமுதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும். சிவாஜி பாா்க்கில் மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று ஆனந்த் குறிப்பிட்டாா்.

ஆஷா போஸ்லே உடலுக்கு முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், மாநில அமைச்சா் ஆசிஷ் ஷெலா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.

பத்ம விபூஷண் விருது பெற்ற அவா் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000-க்கும் அதிக பாடல்களைப் பாடியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.