மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என யோகி ஆதித்யநாத் பேசியது குறித்து...

News image

மேற்கு வங்க பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் - ஏஎன்ஐ

Updated On :12 ஏப்ரல் 2026, 9:41 pm IST

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கு வங்க பிரசாரத்தில் இன்று (ஏப். 12) தெரிவித்தார்.

மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 மற்றும் 29 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பூர்பா மெதினிபூரில் யோகி ஆதித்யநாத் இன்று (ஏப். 12) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

''ராமருடன் தொடர்புடைய புனிதமான உத்தரப் பிரதேசத்தில் இருந்து, தேசிய கீதமும் தேசிய பாடலும் உள்ள மேற்கு வங்க மண்ணிற்கு வந்துள்ளேன். மேற்கு வங்கத்தின் வரலாறும் கலாசாரமும் நாட்டிற்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது.

சுவாமி விவேகானந்தர், ராம் போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி உள்பட இந்த மண்ணுடன் தொடர்புடைய பலர் இந்தியாவின் தேசிய உணர்வைத் தொடர்ந்து ஊக்குவித்தனர்.

ஒரு தேசத்தில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது என்று ஷியாமா பிரகாஷ் முகர்ஜி தெரிவித்திருந்தார். அவரின் அந்தக் கனவு பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் நனவாகி வருகிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மேற்கு வங்கம் தொடர்ந்து சிதைந்து வருகிறது. ரவிந்திரநாத் தாகூர் உள்பட பல அறிவியல் அறிஞர்களையும் முக்கிய ஆளுமைகளையும் இந்த மண் வழங்கியுள்ளது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி அட்டூழியங்கள் நிறைந்த மண்ணாக இதனை மாற்றியுள்ளது.

ஊடுருவியவர்களைத் தங்கள் வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக்கொள்வதற்காகவே, திரிணமூல் அரசாங்கம் எல்லையில் வேலி அமைப்பதை அனுமதிக்கவில்லை.

நாட்டையே உலுக்கிய ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தில் மமதா அமைதி காக்கிறார். ஏனெனில், அதில் தொடர்புடைய குண்டர்கள் மமதாவுக்கு வேண்டியவர்கள்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Those opposing Vande Mataram should leave country": UP CM Yogi Adityanath at Bengal rally, attacks TMC over polarisation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.