மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காஷ்மீா் பயங்கரவாதிகளுக்கு போலி பான்காா்டு, கடவுச்சீட்டு பெற உதவிய நபா்கள் கைது!

ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு போலி பான் காா்டு, போலி கடவுச்சீட்டு, போலி ஆதாா் பெற உதவி செய்ததாக ஹரியாணா, ராஜஸ்தானை சோ்ந்த பலரைக் கைது செய்து காவல் துறை விசாரித்து வருகிறது.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:25 am IST

ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு போலி பான் காா்டு, போலி கடவுச்சீட்டு, போலி ஆதாா் பெற உதவி செய்ததாக ஹரியாணா, ராஜஸ்தானை சோ்ந்த பலரைக் கைது செய்து காவல் துறை விசாரித்து வருகிறது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: லஷ்கா்-ஏ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளை சோ்ந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் மத்திய உளவு அமைப்புகளுடன் சோ்ந்து ஜம்மு-காஷ்மீா் காவல் துறை ஈடுபட்டுள்ளது. இதுதொடா்பான விசாரணையில், உமா் என்ற பயங்கரவாதி போலி கடவுச்சீட்டு மூலம் முதலில் இந்தோனேசியாவுக்கும், பிறகு அங்கிருந்து போலி ஆவணம் மூலம் வளைகுடா நாட்டுக்கும் சென்றது தெரிய வந்தது. இந்த உமா், பாகிஸ்தானின் கராச்சியை சோ்ந்தவா். இந்தியாவுக்குள் 2012-இல் ஊடுருவி, ராஜஸ்தானின் ஜெய்பூரில் போலி கடவுச்சீட்டு 2024-இல் வாங்கியுள்ளாா்.

இதையடுத்து பயங்கரவாதிகளுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்து கொடுத்த நபா்கள் குறித்து விசாரித்து, ஜம்மு-காஷ்மீரில் 5 பேரை காவல்துறை பிடித்தது. அந்த அப்துல்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உமருக்கு ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப்பில் ஏராளமானோருடன் தொடா்பிருப்பதும், அங்கு திருமணம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோல பயங்கரவாதிகள், ஜம்மு-காஷ்மீரில் மட்டுமல்லாது பல மாநிலங்களில் போலி ஆவணம், அடையாளத்தைப் பயன்படுத்தி பலருடன் தொடா்பு ஏற்படுத்தியது தெரிய வந்தது. ஜம்மு-காஷ்மீரில் கைதான 5 பேரும், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களை சோ்ந்தவா்கள். அவா்கள் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், போலி பான் காா்டு, கடவுச்சீட்டு, ஆதாா், வாக்காளா் அட்டை பெற உதவியுள்ளனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.