ஈரான் நாட்டில் சிக்கியிருந்த மேலும் 312 இந்திய மீனவர்களை மீட்க உதவிய ஆர்மீனியா அரசுக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களால், வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தின. இதனால், பல்வேறு நாடுகளின் விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகளின் வழியாகவும், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வழியாகவும் தாயகம் திரும்பினர்.
இந்த நிலையில், ஈரானில் சிக்கியிருந்த மேலும் 312 இந்திய மீனவர்கள் ஆர்மீனியா வழியாகப் பத்திரமாக மீட்கப்பட்டதாக, சனிக்கிழமை (ஏப். 11) அன்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவிய ஆர்மீனியா அரசுக்கும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அராரத் மிர்சோயனுக்கும் மத்திய அரசின் சார்பில் அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, ஈரானில் சிக்கியிருந்த 345 இந்திய மீனவர்கள் ஆர்மீனியா வழியாக மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
முன்னதாக, ஈரானில் இருந்து 1,200-க்கும் அதிகமான இந்தியர்கள் பத்திரமாகத் தாயகம் திரும்பியுள்ளதாகவும்; அதில், 996 பேர் ஆர்மீனியா வழியாக மீட்கப்பட்டதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Union External Affairs Minister Jaishankar has expressed his gratitude to the Government of Armenia for assisting in the rescue of another 312 Indian fishermen stranded in Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!
ஈரானில் சிக்கித் தவித்த 345 தமிழக மீனவர்கள் மீட்பு!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

ஈரானில் இருந்து ஆர்மீனியா, அஜர்பைஜான் வழியாக நாடு திரும்பிய 1,200 இந்தியர்கள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


