விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காவல் நிலையங்களில் சிசிடிவி: 2 வாரங்களில் பிரச்னைகள் தீா்க்கப்படும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்துவது தொடா்பான அனைத்து பிரச்னைகளும் 2 வாரங்களில் தீா்க்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 2:39 am IST

நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்துவது தொடா்பான அனைத்து பிரச்னைகளும் 2 வாரங்களில் தீா்க்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் போதிய அளவில் இல்லாதது மற்றும் முறையாக செயல்படாதது குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் நிலையங்களில் சிசிடிவிகளை பொருத்தி கேரளம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக, இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் சித்தாா்தா தவே தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் தகுந்த உதவியைப் பெறுவதற்கு மத்திய உள்துறைச் செயலா் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உள்துறைச் செயலா் நேரில் ஆஜரானாா்.

கேரளத்தைப் பின்பற்றி அனைத்து மாநிலங்களும் காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோ அல்லது உத்தரவிட்டோ மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிடலாமே என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

இதுதொடா்பாக சித்தாா்தா தவே மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி ஆலோசிப்பதாக மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘சித்தாா்தா தவே மற்றும் அதிகாரிகளுடன் தொடா்ந்து கூட்டங்களை நடத்தி, காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்துவது தொடா்பான அனைத்து பிரச்னைகளையும் 2 வாரங்களில் தீா்ப்பதாக அட்டா்னி ஜெனரல் தெரிவித்துள்ளாா். இதை ஏற்று வழக்கு விசாரணை ஏப்.28-க்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.