மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 8-வது இந்திய கப்பல்!

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து 8-வது எல்பிஜி கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

இந்திய எல்பிஜி கப்பலான ஷிவாலிக், மார்ச் 16 அன்று இந்தியாவின் முந்த்ரா துறைமுகம் வந்தது. - AP

Updated On :6 ஏப்ரல் 2026, 4:29 pm IST

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து 8-வது எல்பிஜி கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'கிரீன் ஆஷா' என்கிற இந்திய கப்பல் மேற்காசிய போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சிக்கியிருந்தது. ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி வழங்கியுள்ள நிலையில் 8-வது இந்தியக் கப்பலாக ‘கிரீன் ஆஷா’ எல்பிஜி கப்பல் நீரிணையைக் கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

முன்னதாக இந்தியக் கொடியேந்திய எரிவாயு கப்பலான கிரீன் சான்வி எனும் கப்பல் 46,650 மெட்ரிக் டன் எல்பிஜி-யுடன் பாதுகாப்பாக ஏப்ரல் 3 அன்று ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தது.

கடந்த மார்ச் 28 அன்று, 47,000 மெட்ரிக் டன்களுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த ஒரு கப்பல் குஜராத்தின் ஜாம்நகர் துறைமுகம் வந்தடைந்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வழியே வரும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பளிக்கும் விதமாக இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேற்காசிய போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியே இந்தியக் கப்பல்களை அனுமதிக்க ஈரானுடன் இந்தியா நடத்திய தொடர் பேச்சுவார்த்தையின் காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

18 இந்தியக் கப்பல்களுடன் 485 மாலுமிகள் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் தற்போது சிக்கியிருப்பதாக இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அவர்களுடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் முகேஷ் மங்கல் கூறுகையில், “இதுவரை 964-க்கும் மேற்பட்ட மாலுமிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், இந்திய துறைமுகங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி, போர்ச்சூழலில் வளைகுடா நாடுகளில் இருந்து 5.98 லட்சம் பயணிகள் இந்தியா திரும்பியுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

Eighth India-flagged LPG carrier crosses Strait of Hormuz

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.