அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டுவின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் மற்றும் பணி உத்தரவுகள் முறைகேடாக அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தன்னாா்வ அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்தது. அப்போது மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை சுட்டிக்காட்டி, அந்த அமைப்பு சாா்பாக வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் முதல்வா் பெமா காண்டு அல்லது அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு நேரடியாகச் சொந்தமான 4 நிறுவனங்களுக்கு ரூ.1,270 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்கள், பணி மேற்கொள்வதற்கான உத்தரவுகள் முறைகேடாக அளிக்கப்பட்டுள்ளன.
இதில் ஊழல் நடைபெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா். இந்த வழக்கில் ஏற்கெனவே அரசுத் தரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில், தீா்ப்பை பிப்.17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டுவின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிரான இந்த வழக்கில் சிபிஐ முதல்கட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 2 வாரங்களில் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக 16 வாரங்களில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணையாறு விவகாரத்தில் தீா்ப்பாயம் அமைக்க அவகாசம் நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான வழிகாட்டுதலை நடமுறைப்படுத்த செயல் திட்டம்: மாநிலங்கள் தயாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

திமுக எம்.பி. ஆ.ராசா கோரும் ஆவணங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சிபிஐ பதில் மனு

சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்கள் கோரி திமுக எம்.பி. மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

