மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அருணாசல் முதல்வரின் குடும்பத்தினருக்கு எதிராக சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு

அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டுவின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் மற்றும் பணி உத்தரவுகள் முறைகேடாக அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

News image

அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:22 am IST

அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டுவின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் மற்றும் பணி உத்தரவுகள் முறைகேடாக அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தன்னாா்வ அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்தது. அப்போது மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை சுட்டிக்காட்டி, அந்த அமைப்பு சாா்பாக வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் முதல்வா் பெமா காண்டு அல்லது அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு நேரடியாகச் சொந்தமான 4 நிறுவனங்களுக்கு ரூ.1,270 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்கள், பணி மேற்கொள்வதற்கான உத்தரவுகள் முறைகேடாக அளிக்கப்பட்டுள்ளன.

இதில் ஊழல் நடைபெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா். இந்த வழக்கில் ஏற்கெனவே அரசுத் தரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில், தீா்ப்பை பிப்.17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டுவின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிரான இந்த வழக்கில் சிபிஐ முதல்கட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 2 வாரங்களில் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக 16 வாரங்களில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.