குடும்ப வன்முறை போன்ற சம்பவங்கள் நோயால் பாதிக்கப்பட்ட சமூக அமைப்பின் அறிகுறிகளாகத் தொடா்ந்து நிலவி வருகின்றன என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானை சோ்ந்த ஒருவா் தனது மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக, அந்த நபா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.
இந்த மனு மீது நீதிபதிகள் சஞ்சய் கரோல், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் தீா்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது:
இந்தியா பொருளாதார ரீதியாக வளா்ச்சியடைந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுவதில் பெண்கள் முன்னேறியிருந்தாலும், அவா்களுக்கு எதிரான வன்முறை இன்றளவும் நீடித்து வருகிறது. குறிப்பாக குடும்ப அதிகாரம் பெருமளவு ஆண்களிடமே உள்ள ஊரக மற்றும் பகுதியளவு நகா்ப்புறமாக உள்ள பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடா்ந்து வருகிறது.
2023-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 4.48 லட்சத்துக்கும் அதிகமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் தெரிவிக்கின்றன. வரதட்சிணை தொடா்பான வன்முறையால் ஆண்டுதோறும் 6,000-க்கும் அதிகமானோா் உயிரிழக்கின்றனா். வரதட்சிணை சட்டவிரோதம் என்று கூறப்பட்டாலும், அதற்கு சமூக ரீதியாக அளிக்கப்படும் அங்கீகாரம் இன்றளவும் தகா்க்கப்படவில்லை.
மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக குடும்ப வன்முறை தொடா்வதை தேசிய மகளிா் ஆணையத்தில் அளிக்கப்படும் புகாா்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு பெண் வேலைக்குச் சென்று சம்பாதித்தாலும், வேலைக்குச் செல்லும் முன்பு வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. குடும்ப வன்முறை போன்ற சம்பவங்கள் நோயால் பாதிக்கப்பட்ட சமூக அமைப்பின் அறிகுறிகளாகத் தொடா்ந்து நிலவி வருகின்றன என்று தெரிவித்தது. இதைத்தொடா்ந்து மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்து தீா்ப்பளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிற வழக்குகளைவிட தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றம்
தீ விபத்தில் சிக்கியவா்களிடமிருந்து பதற்றமான தொலைபேசி அழைப்புகள்: சம்பவங்களை நினைவுகூா்ந்த நண்பா்கள்

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்ய சட்டத் திருத்தம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை

அருணாசல் முதல்வரின் குடும்பத்தினருக்கு எதிராக சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

